Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் கனமழை – வடமாவட்டங்களுக்கு நற்செய்தி !

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (10:59 IST)
நாளை மறுநாள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு கிரீடம் வைத்தாற்போல அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. அதிகப்படியான வெப்பம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச் சலன மழைப் பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் சிலப் பகுதிகளில் வரும் மே 14 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு பலத்த சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு இதுவரை 32 மிமி மழைப் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 62 சதவீதம் குறைவான அளவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments