Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

Mahendran
புதன், 21 மே 2025 (15:43 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று இரவு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கேரளாவில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையை உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை நாமும் காண்கிறோம்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நாளை முதல், அதாவது மே 22 முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக இந்த மழை ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மாநகரத்தை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments