தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

Siva
வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:05 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
 
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னையில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் இடங்களில் ராட்சதப் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், இன்று காலை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆக்கிய பகுதிகளிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments