Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழை: ஆர்.கே. நகர் தொகுதியில் அதிரடியாக களம் இறங்கிய ஜெயலலிதா

கனமழை: ஆர்.கே. நகர் தொகுதியில் அதிரடியாக களம் இறங்கிய ஜெயலலிதா
, செவ்வாய், 17 நவம்பர் 2015 (00:44 IST)
சென்னை ஆர்.கே.நகர் பகுதிகளில் மழை வெள்ளப் பகுதிகளை முதல்வர ஜெயலலிதா பார்வையிட்டார்.
 

 
கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையில் அதிக மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், சென்னை‬ ஆர்.கே. நகர் தொகுதியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட வருகை தந்தார். அவர் வேனிலேயே அமர்ந்தவாறு பார்வையிட்டார். பின்பு, அப்பகுதி மக்களிடம், மூன்று  மாதங்களுக்கு  பெய்ய  வேண்டிய மழை  மூன்று   நாட்களில்  கொட்டி தீர்த்து  விட்டது. ஆனாலும், நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். யாரும் கவலைப்பட வேண்டாம்.
 
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை  மேற்கொள்ளும். உங்களுடன் நான் துணை நிற்பேன் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil