Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் காத்திருக்குது செம மழை! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick
புதன், 14 ஆகஸ்ட் 2024 (08:31 IST)

கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 9 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மற்றும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை, விழுப்புரம் பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது.

 

நேற்று கன்னியாக்குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு 

மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments