Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் கனமழை: பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை!

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (09:23 IST)
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்துள்ளார். 


 
தமிழகத்திற்கு பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலும், இந்த முறை தென்மேற்கு பருவமழையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறது. நேற்று இரவு பெய்யத்தொடங்கிய மழை காலை வரை விடாமல் பெய்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தின்  22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், வேலூர் ,கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான  தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும்  பெய்து வருகிறது. இதில் வேலூர் மாவட்டங்ககளில் பரவலாக இரவு முழுவதும் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments