Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் கனமழை: பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை!

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (09:23 IST)
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்துள்ளார். 


 
தமிழகத்திற்கு பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலும், இந்த முறை தென்மேற்கு பருவமழையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறது. நேற்று இரவு பெய்யத்தொடங்கிய மழை காலை வரை விடாமல் பெய்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தின்  22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், வேலூர் ,கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான  தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும்  பெய்து வருகிறது. இதில் வேலூர் மாவட்டங்ககளில் பரவலாக இரவு முழுவதும் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments