Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (15:41 IST)
நாளை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது 
 
குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இரவில் மழை பெய்தது. இந்த நிலையில் நாளை  திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
சிலமணி நேரங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று அறிவித்த வானிலை ஆய்வு மையம் தற்போது 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments