Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல இடங்களில் கனமழை.. ஒருமணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் தேங்கி நிற்கும் நீர்..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (18:50 IST)
கடந்த ஒரு மணி நேரமாக சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதும் ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளான அடையாறு, மயிலாப்பூர், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. 
 
இதனால் சாலைகளை தண்ணீர்  தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments