Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (19:37 IST)
சென்னையின் முக்கிய இடங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்பத்தூர் அண்ணா நகர் வடபழனி வேளச்சேரி திருவல்லிக்கேணி கோடம்பாக்கம் தேனாம்பேட்டை ராயப்பேட்டை பட்டினபாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது
 
இதனால் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். ஏற்கனவே சென்னையில் நவம்பர் 11ம் 12 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments