Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:19 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி,  திண்டுக்கல்லில் மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2.30 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி குமரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழை  பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments