Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவில் கனமழை: சாலைகளில் மழைநீர்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (08:00 IST)
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று இரவு முதல் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்ததை அடுத்து நகர் முழுவதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை அண்ணா சாலை எழும்பூர் சைதாப்பேட்டை பிராட்வே டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ராயப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் மாதவரம் கொடுங்கையூர் வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து உள்ளது என்றும் இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments