வெதர்மேன் கூறியது பலித்தது! சென்னையில் விடிய விடிய மழை

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (05:11 IST)
சென்னையில் நேற்று 1000% மழை பெய்யும் என உறுதியாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அவர் கூறியதால் நேற்று மாலை முதல் பலர் குடையுடன் சென்றனர்.



 
 
வெதர்மேன் கூறியது போலவே நேற்று இரவு சுமார் 9 மணிக்கு தொடங்கிய சாரல், பின்னர் மழையாக மாறி விடிய விடிய பெய்தது. இதனால் சென்னை மக்கள் குளிர்காற்றை நீண்ட நாட்களுக்கு பின்னர் உணர்ந்தனர்.
 
வட சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் சென்னை அருகே உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக, சோழவரம் பகுதியில் 150 மி.மீ மழையும், மிஞ்சூரில் 68 மி.மீ மழையும், கடம்பத்தூர் (திருவள்ளூர்) பகுதியில் 82 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழை இன்னும் ஒருசில நாட்களுக்கு தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments