Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடிய விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிப்பு

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (07:29 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது மட்டுமன்றி அதிகாலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகரிலும் கனமழை கொட்டியது.
 
 
இந்த நிலையில் சென்னையில் விடிய விடிய மழை பெய்த போதிலும் வழக்கம்போல் பள்ளிகளில் இருக்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதேபோல் திருவள்ளூரிலும் பள்ளிகள் இன்று இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார் 
 
 
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டியதால் இன்று பள்ளி விடுமுறை இருக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்த்த மாணவ-மாணவிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றமாக உள்ளது. எனவே இந்த மழையிலும் அவர்கள் பள்ளிக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments