Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா மழை எதிரொலி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (14:17 IST)
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்ப்பாதால், இதன் எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கன் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
ஏற்கனவே, நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. 
 
மேலும், தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கோவை மாவட்டத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. 
 
சென்னையை பொறுத்தவரை சென்னையின் முக்கிய நகரங்களிலும், வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில், குறிப்பாக கன்னியாக்குமரி, நெல்லை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ளதால் கன்னியாக்குமரி, கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments