Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா மழை எதிரொலி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (14:17 IST)
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்ப்பாதால், இதன் எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கன் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
ஏற்கனவே, நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. 
 
மேலும், தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கோவை மாவட்டத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. 
 
சென்னையை பொறுத்தவரை சென்னையின் முக்கிய நகரங்களிலும், வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில், குறிப்பாக கன்னியாக்குமரி, நெல்லை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ளதால் கன்னியாக்குமரி, கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments