Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யும்: வானிலை ஆய்வாளர் கணிப்பு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:37 IST)
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்றும், குறிப்பாக இன்று நள்ளிரவு லேசான மழை பெய்ய ஆரம்பித்து, நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.  நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ,  16ஆம் தேதி 15.5 செமீ, மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், இன்று மதுரை, தேனி, விருதுநகர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments