Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யும்: வானிலை ஆய்வாளர் கணிப்பு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:37 IST)
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்றும், குறிப்பாக இன்று நள்ளிரவு லேசான மழை பெய்ய ஆரம்பித்து, நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.  நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ,  16ஆம் தேதி 15.5 செமீ, மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், இன்று மதுரை, தேனி, விருதுநகர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments