Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (07:35 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மழையின் பாதிப்பை சரி செய்ய அனைத்து மாவட்ட நிர்வாகங்கள்  இரவு பகல் பாராமல் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட நான்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments