Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
சனி, 27 மே 2023 (15:25 IST)
தமிழகத்தில் அடுத்த 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த   நிலையில், வெயில் வாட்டி வருவதால் மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு வரும் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
 
மேலும், தமிழகத்தின், நீலகிரி, திருச்சி, சேலம்,  நாமக்கல், தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments