Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
சனி, 27 மே 2023 (15:25 IST)
தமிழகத்தில் அடுத்த 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த   நிலையில், வெயில் வாட்டி வருவதால் மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு வரும் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
 
மேலும், தமிழகத்தின், நீலகிரி, திருச்சி, சேலம்,  நாமக்கல், தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments