Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:21 IST)
நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை எதிரொலியாக ஏற்கனவே தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments