Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்

Siva
புதன், 5 ஜூன் 2024 (13:44 IST)
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தாலும் கோடை காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் வெயில் கொளுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலை குளிர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
நேற்று மாலை திடீரென சென்னையில் மழை பெய்தது என்பதும் இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த மாவட்டங்களில் பெயர்கள் இதோ:
 
கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments