இன்று 14 மாவட்டங்களில் கனமழை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வியாழன், 23 அக்டோபர் 2025 (13:44 IST)
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் : ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
 
இதற்கிடையில், நாளை கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் மோதியதில் தீப்பற்றிய பேருந்து! 21 பேர் உடல் கருகி பலி! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் திடீர் உயர்வு? பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்!

மோடிக்கிட்ட பேசுனேன்.. ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்துகிறது! - ட்ரம்ப் மகிழ்ச்சி!

உக்ரைனில் போய் சண்டை போட சொல்றாங்க.. காப்பாத்துங்க! - ரஷ்யாவில் இருந்து கதறிய இந்தியர்!

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! - இன்றைய மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments