Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் சில மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

இன்னும் சில மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:17 IST)
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது. 
 
இந்த நிலையில்  இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த 24 மாவட்டங்கள் பின் வருமாறு: 
 
சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, நெல்லை 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துதல்: தமிழக அரசு ஒப்புதல்