Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகல் 1 வரை சென்னை உள்பட 21 மாவட்டங்களில் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (11:12 IST)
இன்று பகல் ஒரு மணி வரை சென்னை உள்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கும் நிலையில், சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தேனி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று பகல் ஒரு மணி வரை கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இன்று வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் இதன் காரணமாக வட தமிழக, புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவது எப்போது? பாஜக வட்டார தகவல்..!

பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.. மத்திய காசாவில் பெரும் அதிர்ச்சி..!

மும்பை - நியூயார்க் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. நடுவானில் ஏற்பட்ட அதிர்ச்சி..!

ரொனால்டோ அறிமுகப்படுத்திய புதிய கைக்கடிகாரம்! - விலையை கேட்டா மிரண்டு போவீங்க!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments