Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (18:29 IST)
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வெப்ப காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் வெப்பத்தின் அளவு கடந்த சில நாட்களவே இயல்பை விட அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சூறை காற்றுடன் மழை பெய்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 
 
ஆந்திராவில் தொடர்ந்து அதிக அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்தை நோக்கி அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
மேலும் இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்தாவது:-
 
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி  செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகும். உள் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments