Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2016 (11:09 IST)
பள்ளி மாணவிகளிடம் ஆபாச படம் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

 

நாகர்கோவில் தாலுகா ஆரல்வாய்மொழி அருகே உள்ளது சீதப்பால்.அங்கு உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை சுப்பையன்(52) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் அந்த பள்ளியில் படித்துவந்த 5ம் வகுப்பு மாணவிகள் அழைத்து, செல்போனில் ஆபாச படம் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து பள்ளிக்கு சென்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.

இந்நிலையில் மாணவியின் தாயார்  நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் சுப்பையன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments