Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (11:39 IST)
நாகை மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிகளுக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
நகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் திருவேங்கடம் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்ததால் தலைமை ஆசிரியர் மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்