Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோவில் வந்த ரூ.1 கோடி ஹவாலா பணம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் சிக்கிய 3 நபர்கள்..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (12:40 IST)
சென்னையில் 3 நபர்கள் ஆட்டோவில் ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்தி வந்த நிலையில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சாமத்தியம் காரணமாக மூன்று பேர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். \


சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர்  சுந்தர்ராஜ் என்பவரின் ஆட்டோவில் ஆந்திராவைச் சேர்ந்த  மூன்று பேரை சவாரியாக ஏறியுள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டு வந்ததிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் கடத்துகின்றனர் என்பதை ஆட்டோ டிரைவர் கண்டுபிடித்துள்ளார்.

உடனே திடீரென ஆட்டோவை அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு  ஓட்டிச் சென்ற அவர் போலீசாரிடம் தனது சந்தேகத்தை தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆட்டோவில் இருந்த மூவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர்

அப்போது ஆட்டோவில் இருந்த மூவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை ஆட்டோ ஓட்டுநரின் சாதுரியத்தால் ஆந்திராவில் இருந்து வந்தவர்களிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments