Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாதி அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது - ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2015 (14:22 IST)
ஜாதியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
பாமகவின் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ் பேசினார்.
 
அப்போது அவர் கூறுகையில், ”தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் அடங்கிய தஞ்சை தரணியில் 18 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக, திமுக வெற்றிபெறவில்லை என்ற நிலையை நீங்கள் ஏற்படுத்தி இருந்தால் ஆட்சியாளர்கள் திருந்தி இருப்பார்கள்.
 
ஆனால் மக்கள் இன்று இலவசங்களுக்கு வரிசை கட்டி நிற்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கக்கூடிய தகுதி அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.
 
மக்களை நம்பி அரசு கடன் வாங்கியது தான் தமிழகத்தின் வளர்ச்சியா? இன்று தமிழகத்தில் ஒவ்வொரு மக்களின் பெயரிலும் ரூ.60 ஆயிரம் கடன் உள்ளது.
 
பாமகவை சிலர் ஜாதிக்கட்சி என்று கூறுகிறார்கள். ஜாதியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. நான் தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, மண்ணுக்காக, தமிழர்களின் உரிமைக்காக களத்தில் நின்று போராடி உள்ளேன்” என்றார்.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments