Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நளினியை விடுதலை செய்ய அதிகாரமில்லை - தமிழக அரசு பதில்

நளினியை விடுதலை செய்ய அதிகாரமில்லை - தமிழக அரசு பதில்
, வெள்ளி, 24 ஜூன் 2016 (18:49 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியின் முன்விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கூறியுள்ளது.
 

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”எந்த குற்றம் செய்திருந்தலாலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவுப்படி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யலாம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
மேலும், தமிழக உள்துறை செயலருக்கு அளித்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். தற்போது நளினியின் மனுவிற்கு தமிழக அரசு உள்துறை துணைச் செயலாளர் டேனியல் பதில் மனு தாக்கல் செய்தார்.
 
அதில், ராஜீவ் வழக்கை சிபிஐ விசாரித்ததால் நளினியை முன்விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என அரசு தனது பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் இவ்விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க இயலாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் கன்றுக்குட்டி