Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் பேருந்தில் இளம்ஜோடியின் சில்மிஷத்தால் பயணிகள் முகம் சுழிப்பு

ஓடும் பேருந்தில் இளம்ஜோடியின் சில்மிஷத்தால் பயணிகள் முகம் சுழிப்பு
, வியாழன், 26 மார்ச் 2015 (17:17 IST)
ஓடும் பேருந்தில் எல்லை மீறி நடந்து கொண்ட இளம்ஜோடி செயல் பயணிகளை முகம் சுழிக்க வைத்தது.
 
அரசு பேருந்து ஒன்று தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஏறி நெல்லைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் தொடர்ந்து செல்போன் பேசிய வண்ணம் இருந்துள்ளார். மேலும், தனது அருகில் அமர்வதற்கு வேறொரு வருவார் என்று தனதருகில் உள்ள இடத்தை யாருக்கும் கொடுக்காமல் இருந்துள்ளார்.
 
பஸ் மெஞ்ஞானபுரம் வந்ததும் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் அந்த இளம்பெண் அருகில் போய் அமர்ந்தார். சிறிது தூரம் வரை பேசிக்கொண்டே வந்தவர்கள் பிறகு சிரித்து சிரித்து விளையாடுவதும், தொடுவதுமாக இருந்துள்ளனர்.
 
பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பஸ்சில் இருப்பதை மறந்து முத்தம் கொடுப்பதும், மேலும் சொல்ல முடியாத அளவுக்கு சில்மிஷத்திலும்  ஈடுபட்டு வந்துள்ளனர். இதைப் பார்த்த மற்ற பயணிகள் முகம் சுழித்தனர். பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் இளம்ஜோடிகளின் செயலை பயணிகள் கண்டித்தனர்.
 
பிறகு, மீண்டும் அந்த ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபட ஆரமித்ததும், நடத்துனர் வாலிபரை இடம் மாறி அமரும்படி கூறினார். முதலில் மறுத்த அவர், நடத்துநர் பேருந்தை விட்டு இறங்கும்படி கண்டிப்புடன் கூறவும் வாலிபர் வேறு இருக்கைக்கு மாறினார். நெல்லை பஸ் நிலையம் வந்ததும் இருவரும் இறங்கிச் சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil