Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க இல்லாம ஆட்சியமைக்க முடியாது! – எச்சரிக்கை விடுக்கும் எச்.ராஜா!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (13:38 IST)
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என எச்.ராஜா பேசியுள்ளார்.

முன்னதாக விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எச்.ராஜா பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் முற்று பெற்ற நிலையில் மீண்டும் எச்.ராஜா அதிமுக குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”பாஜக கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாது. அதிமுக எல்லை மீறி நடக்கக்கூடாது. அமைச்சர் செல்லூர் ராஜூவும், அமைச்சர் ஜெயக்குமாரும் பேசுவது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார். பாஜகவினர் மீது சமீப காலங்களில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுப்பதை குறித்து மறைமுகமாக எச்.ராஜா பேசுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

அடுத்த கட்டுரையில்
Show comments