Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டு சீட்டு படிக்க தெரியாதவர் இதை படிப்பாரா!? – மறைமுகமாய் விமர்சிக்கும் எச்.ராஜா

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (18:02 IST)
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவை விமர்சித்து பேசியுள்ளார் எச்.ராஜா.

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார் எச்.ராஜா. தமிழக எதிர்கட்சிகள் இலங்கை தமிழர்கள் குடியுரிமை வேண்டி போராடி வரும் நிலையில் இதுகுறித்து பேசிய எச்.ராஜா ”பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களை தவறான திசையில் வழிநடத்துகின்றனர்.

முதலில் அவர்கள் குடியுரிமை சட்டத்தை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். துண்டு சீட்டை கூட சரியாக படிக்க தெரியாதவர் இதை எப்படி படிப்பார்?” என பேசியுள்ளார்.

பேச்சுக்கிடையே துண்டு சீட்டு படிக்க தெரியாதவர் என மு.க.ஸ்டாலினைதான் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசி கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments