இன்னும் பல ரயில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது: ஹெச் ராஜா அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (08:37 IST)
ஒடிசா ரயில் விபத்து போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இன்னும் பல ரயில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக ஹெச் ராஜா கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பிரதமரை நோக்கி கூறுபவர்கள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். 
 
மேலும் ஓடிஸா ரயில் விபத்தில் சதி நடந்து இருப்பதாகவும் ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரயில் விபத்து ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறிய அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நக்சலைட்டுகள் இன்னும் நிறைய ரயில் விபத்து போன்ற சதி வேலைகளை செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 மேலும் அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட போது நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி சிறுமி தற்கொலை செய்து கொண்ட போது டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என ஏன் கூறவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments