டாடா, அம்பானியின் பங்களிப்பு இதோ, சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன? ஹெச்.ராஜா கேள்வி

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:04 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு டாடா மற்றும் அம்பானி நிறுவனங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?? என்று ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாள்தோறும் 700 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது 
 
அதே போல் டாட்டா குழுமம் தினமும் 200 முதல் 300 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தினமும் 400 டன் ஆக்சிஜனை இலவசமாக JSW  நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியை ஹெச் ராஜா எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அம்பானி குழுமம் நாள்தோறும் 700 டன் ஆக்ஸிஜன்,  டாடா குழுமம் தினமும் 200-300 டன், JSW தினமும் 400 டன் ஆக்ஸிஜன் இலவசமாகத் தருகிறது. சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments