Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா, அம்பானியின் பங்களிப்பு இதோ, சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன? ஹெச்.ராஜா கேள்வி

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:04 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு டாடா மற்றும் அம்பானி நிறுவனங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?? என்று ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாள்தோறும் 700 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது 
 
அதே போல் டாட்டா குழுமம் தினமும் 200 முதல் 300 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தினமும் 400 டன் ஆக்சிஜனை இலவசமாக JSW  நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியை ஹெச் ராஜா எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அம்பானி குழுமம் நாள்தோறும் 700 டன் ஆக்ஸிஜன்,  டாடா குழுமம் தினமும் 200-300 டன், JSW தினமும் 400 டன் ஆக்ஸிஜன் இலவசமாகத் தருகிறது. சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments