Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஹெச் ராஜா !

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (09:10 IST)
தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டு வந்த அவர் இப்போது நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி பேசிய ஹெச் ராஜா சிதம்பரத்தின் கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். அவர் ஸ்டாலினைதான் சொல்லுகிறார் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நேற்று பேசிய அவர் ‘ப.சிதம்பரத்தைப் போன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்.’ எனக் கூறி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments