Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசபக்தர்கள் மட்டும் வரவும்; போராட்டத்திற்கு அழைக்கும் ஹெச்.ராஜா

Arun Prasath
வியாழன், 19 டிசம்பர் 2019 (13:14 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து தேச பக்தர்களையும் அழைத்துள்ளார் பாஜகவின் ஹெச்.ராஜா

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இச்சட்டத்தை ஆதரித்தும் பாஜகவின் மாணவ சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ”வருகிற 20.12..2019 அன்று மாலை 3.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பெருந்திரள் ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது. அதில் தேசபக்தர்கள் அனைவரையும் வரவேற்க ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் தேச பக்தர்களின் கோட்டை, இங்கு தேச விரோதிகளுக்கு இடமில்லை எனவும் அதில் கூறியுள்ளார். பாஜகவை விமர்சிப்பவர்களை எப்பொழுதும் Anti-Indian என குற்றம் சாட்டும் ஹெச்.ராஜா, இந்த போராட்ட்த்தில் தேச பக்தாளர்களை வரவேற்க ஆவலோடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments