Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகெலும்பு இல்லாத தொடை நடுங்கி கமல்: எச்.ராஜா தாக்கு

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (14:27 IST)
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது பிறந்த நாளின்போது அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு அறிவிக்கவுள்ளதாகவும், மக்களை தன்னுடன் இணைக்கும் வகையில் ஒரு செயலி வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் நேற்று தனது ரசிகர்களிடையே பேசிய கமல், தமிழகத்தில் ஒரு ஏரியை காணவில்லை என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது டுவிட்டரில் கூறிய எச்.ராஜா, 'ஒரு ஏரியக் காணவில்லையாம் தன் ரசிகர்களை தேடச் சொல்லப்போகிறேன் என்கிறார் கமல். மதுரை உயர்நீதிமன்றமே ஏரியின் மீது தான் உள்ளது. பாவம் மக்கள்' என்று கூறியுள்ளார்.
 
மேலும் தமிழிசை செளந்தராஜனின் 'இந்துதீவிரவாதம் என்று கொளுத்திப்போடுவது சுயரூபமா? இல்லை விஸ்வரூபம் 2 புதுப்படம் ஓட வைக்க பொய் விஸ்வரூபமா?' என்ற டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில் எச்.ராஜா பதிவு செய்த டுவீட்டில் 'முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கியின் பிதற்றல் அவ்வளவுதான். பி ஜே இவரின் கோழைத்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார்' என்று கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments