அசுத்தமான நீரை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்திய ஹெச்.ராஜா; திணறிய ரயில்வே அதிகாரி

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (15:10 IST)
ஹெச்.ராஜா தலைமையிலான குழுவினர் ரயில்வே அதிகாரியை அசுத்தமான குடிநீரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள 6வது நடைமேடையில் குடிநீர் குழாய் நீர் சுகாதாரமற்ற நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீராமை அழைத்து அந்த குடிநீரைக் குடிக்குமாறு கூறியுள்ளனர். அதை குடித்த ஸ்ரீராம் உடனே துப்பியுள்ளார். உடனே ஹெச்.ராஜா தலைமையிலான குழு கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.
 
பின்னர் அவர் மறுக்க இது குடிநீரா? இல்லை கழிவறை நீரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் திருச்சி ரயில் நிலைய அதிகாரிகளை கடுமையாக திட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments