Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ கிறிஸ்டியனா..? மகாபாரதம் பத்தி ஏன் பேசுற? – செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா ஆவேசம்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (12:26 IST)
செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பத்திரிக்கையாளரை பார்த்து ‘நீ கிறிஸ்டியனா?” என கேட்டு பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சூழலில் அடிக்கடி தனது பேச்சால் சர்ச்சையை சந்தித்து ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. நேற்று பாஜக கட்சியின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் பத்திரிக்கையாளர்கள் புனைவுக் கதைகளை நம்புவதாக கூற, அதற்கு ஒரு பத்திரிக்கையாளர் “மகாபாரதம் மாதிரியா?” என கேட்டதால் பரபரப்பு எழுந்தது.

ALSO READ: ”விராட் கோலியவே தப்பா பேசுறியா?” நண்பனை கொடூரமாக கொன்ற இளைஞர்!

உடனடியாக ஆவேசமான எச்.ராஜா ’வெளியே போ’ என பத்திரிக்கையாளரிடம் கோவப்பட்டதுடன், ”மகாபாரதம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.. அப்போ பைபிள் புனைவு என்று சொல்வீர்களா? நீங்கள் கிறிஸ்தவரா?” என கேள்விகள் எழுப்பினார். பின்னர் செய்தியாளர்கள் இந்து விரோத நிலைபாட்டில் இருப்பதாக கண்டனம் தெரிவித்த அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments