Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடப்பாவி... 23 வயசுல 8 கல்யாணமா? திக்குமுக்காடிய மனைவிகள்!!

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (17:19 IST)
23 வயதேயான இளைஞர் ஒருவர் 8 திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் சந்தோஷ். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த இவர் 5 மாதங்களுக்கு முன்பு, சத்யா என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்தார். 
 
அதன்பின்னர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலைக்கு சென்ற சந்தோஷ் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சத்யா, காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி என திருப்பூர் போலீசாரிடம் புகாரளித்தார். 
 
கணவர் சந்தோஷின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர் சொந்த ஊரில் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது சந்தோஷ், சசிகலா என்ற இளம்பெண்ணுடன் சந்தோஷ் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பது அம்பலமானது. 
 
சந்தோஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மொத்தம் 8 இளம்பெண்களை ஏமாற்றி சந்தோஷ் தனித்தனியே திருமணம் செய்து குடித்தனமும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments