தமிழகத்தை உருபடியாக்க ரஜினிதான் வரனும்: கொளுத்தி போட்ட துக்ளக் குருமூர்த்தி!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (12:46 IST)
தமிழ்நாட்டை உருப்படியாக்க ரஜினி தான் முதலமைச்சராக வரவேண்டும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. 
 
ரஜினி கட்சி துவங்குகிறார் தேர்தலில் போட்டியிட உள்ளார் என சில வருடங்களாக செய்திகள் மட்டுமே செவிகளில் விழுந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அரசியல் திட்டங்களையும், தன் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதையும் தனது ரசிகர்கள் இதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என கூறியிருந்தார். 
 
இந்த முடிவிற்கு பலரும் பலவித கருத்துக்களை கூறி வந்தனர். இதேபோல  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், ரஜினி தனது முடிவ மறு சிந்தனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான துக்ளக் பத்திரிக்கையில் வாசகர் ஒருவர், ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் மட்டும் கூறுவது எதை காட்டுகிறது? என கேட்டுள்ளார். 
 
இதற்கு குருமூர்த்தி, ”தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது” என பதிலளித்துள்ளார். அதாவது ரஜினி முதல்வர் பதவி குறித்து மறு சிந்தனை செய்யும் பட்சத்தில் தமிழகம் உருப்பட வாய்ப்புள்ளது என மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments