Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கவில்லையா?

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (12:10 IST)
கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்காததால் முதலமைச்சரே திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ள நிலையில் இதற்கு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் காரணமாக மருத்துவமனை திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை அவர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மருத்துவமனையை திறந்து வைப்பார் என தமிழக அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!

"தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கேரள ஏடிஎம்-இல் கொள்ளை.. கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள்.. மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

நாளை திருமலைக்கு வரும் ஜெகன்மோகன் ரெட்டி.. நிபந்தனை விதித்த தேவஸ்தான அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments