Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா விவகாரம்; விஜயபாஸ்கர், ஜார்ஜ் வீட்டில் சோதனை : சிபிஐ அதிரடி

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (10:30 IST)
குட்கா விவகாரத்தை கையிலெடுத்துள்ள சிபிஐ விஜயபாஸ்கர் வீடு, காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தை லஞ்ச ஒழுப்புத்துறை விசாரித்து வந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் எம்.எல்.ஏ அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பேனர்ஜி இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, குட்கா அதிபர் மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு மற்றும் தமிழகமெங்கும் 40 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments