Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (11:48 IST)
தமிழகத்தில் குட்கா, பான் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் குட்கா பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. கடந்த மாதத்தில் மாநிலம் முழுவதும் பல டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.

குட்கா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “பான், குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் விநியோகத்தில் ஈடுபட்ட 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பான், குட்கா உள்ளிட்ட 491 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments