Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (11:48 IST)
தமிழகத்தில் குட்கா, பான் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் குட்கா பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. கடந்த மாதத்தில் மாநிலம் முழுவதும் பல டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.

குட்கா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “பான், குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் விநியோகத்தில் ஈடுபட்ட 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பான், குட்கா உள்ளிட்ட 491 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments