Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஆர்டி நிறுவனம் ரூ1 கோடி, திருமாவளவன் ரூ.10 லட்சம்: குவியும் கொரோனா நிதி

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (08:39 IST)
ஜிஆர்டி நிறுவனம் ரூ1 கோடி, திருமாவளவன் ரூ.10 லட்சம்: குவியும் கொரோனா நிதி
தமிழகமே கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள அதிக செலவினங்கள் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார் 
 
அதுமட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் நிதி வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்பட பலர் நிதிகளை குவித்து வருகின்றனர்
 
குறிப்பாக ஜோஹோ நிறுவனம் 5 கோடி ரூபாய், சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம் ரூபாய், ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், என நிதியை கொடுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் ஜிஆர்டி குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஜிஆர் அனந்த பத்மநாபன் மற்றும் ஜி.ஆர்ராமகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து ரூபாய் 5 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments