Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகாயத்திற்கு கொலை மிரட்டல்: நவீன துப்பாக்கியுடன் கூடுதல் பாதுகாப்பு

சகாயத்திற்கு கொலை மிரட்டல்: நவீன துப்பாக்கியுடன் கூடுதல் பாதுகாப்பு
, வியாழன், 26 மார்ச் 2015 (14:38 IST)
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்திவரும் சகாயத்திற்கு, கொலை மிரட்டல் புகார் எதிரொலி காரணமாக நவீன துப்பாக்கியுடன் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
 
கிரானைட் குவாரிகள் மற்றும் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்த சகாயத்திடம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் புகார் மனுக்களை அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அவர், தற்போது 10 ஆவது கட்ட விசாரணை நடத்தி வருகிறார்.
 
இதற்கிடையில் சகாயத்திற்குக் கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
 
இந்நிலையில் சகாயத்திற்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் உட்பட 3 காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, தற்போது கொலை மிரட்டல் புகார் எதிரொலியாக நவீன துப்பாக்கியுடன், தற்போது மொத்தமாக, 2 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் 4 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil