Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (00:49 IST)
சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஆளுநரை சந்தித்த பின் கூறியுள்ளார்.


 

தமிழக அரசியல் நிலவரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.

இதனால், தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். இதனால், சசிகலா - பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்து பேசினார். ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பின் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments