Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநர் கே.ரோசய்யா புத்தாண்டு வாழ்த்து

ஆளுநர் கே.ரோசய்யா புத்தாண்டு வாழ்த்து
, வெள்ளி, 1 ஜனவரி 2016 (08:52 IST)
அளவில்லா மகிழ்ச்சி, சமத்துவம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை இந்த புத்தாண்டின் விடியல் கொண்டுவரட்டும் என்று கூறி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
கே.ரோசய்யா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 
 
மகிழ்ச்சிகரமான புத்தாண்டையொட்டி சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
நம்முடைய நாட்டின் உயர்ந்த கலாசாரம், பாரம்பரியத்தை உலக அளவில் மேம்படுத்த தீர்மானம் எடுப்போம்.
 
மேலும் இந்தியாவை சர்வதேச அளவில் ஒரு தலைசிறந்த நாடாக உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். 
 
அளவில்லா மகிழ்ச்சி, சமத்துவம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை இந்த புத்தாண்டின் விடியல் கொண்டுவரட்டும். இவ்வாறு அந்த புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil