Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்விற்கு நான் ஒருபோதும் தடை கொடுக்க மாட்டேன்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
நீட் தேர்வு தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மசோதாவிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.  
 
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெற்றோராக நீட் தேர்வு தடை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது நீட் தேர்வுக்கு ஒருபோதும் நான் தடை கொடுக்க மாட்டேன் என்றும் நமது குழந்தைகளை கஷ்டத்திற்கு ஆழ்த்த நான் விரும்பவில்லை என்றும் கூறினார். 
 
நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போதே நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யலாம் என்றும் அவர் கூறினார். 
 
நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக அரசு ஒருபக்கம் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு தடை கொடுக்க மாட்டேன் என உறுதிப்பட கவர்னர் ஆர்.என்.ரவி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments