Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களை குரு என்று தான் அழைக்க வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (08:54 IST)
ஆசிரியர்களை மரபு படி குரு என்று தான் அழைக்க வேண்டும் என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.  
 
எண்ணித் துணிக என்ற நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியபோது ’நமது நாட்டில் காலம் காலமாக ஆசிரியர்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களை மரபு படி குரு என்று தான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் 
 
நான் ஒரு நாளைக்கு எட்டு கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வேன் என்றும் நான் என்னுடைய ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து கொடுத்துள்ளேன் அவர் உறங்கும் போது கால்களை அழுத்தி சேவை செய்து உள்ளேன் என்று தெரிவித்தார். 
 
இது நமது கலாச்சாரமாக இருந்தது என்றும் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மரபு இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments