Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதான தர்மம் தொடங்கியதே தமிழகத்தில்தான்..! – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (10:02 IST)
திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி சனாதானம் தொடங்கியதே தமிழ்நாட்டில் இருந்துதான் என பேசியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா இன்று நடைபெறுகிறது. அதில் காலை முதல் பல்வேறு இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி வருகின்றனர்.

இன்று நடைபெறும் ஆராதனை விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “இந்தியாவின் கலாச்சார அடையாளம் ராமர். காஷ்மிர் முதல் கன்னியாக்குமரி வரை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார். இந்திய நாடு ஆட்சியாளர்களால் உருவாக்கப்படவில்லை. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.

சனாதான தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது. சனாதான தர்மம் என்பது தெற்கிலிருந்துதான் தொடங்கியது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தொடங்கியது” என அவர் கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments